;
Athirady Tamil News

யாழில் வீதியில் சென்றவர் திடீர் மரணம்

0

யாழ்ப்பாணம் – நவாலி பகுதியில் இன்றையதினம் துவிச்சக்கர வண்டியில் சென்ற முதியவர் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 70 வயதான அருளப்பு விமலதாஸ் என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

நவாலி சென்பீற்றர்ஸ் தேவாலயம் அருகில் உள்ள வீதியில் இன்று திங்கட்கிழமை (20) காலைமுதியவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.