;
Athirady Tamil News

சபீனா வித்தியாலய மாணவி சாஸியா ஸீனத் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி

0

2023 ம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையில் கல்முனை கல்வி வலய காரைதீவு கல்வி கோட்டத்தின் மாளிகைக்காடு கமு/கமு/ சபீனா முஸ்லிம் வித்தியாலய மாணவி எம்.ஐ. சாஸியா ஸீனத் மாவட்ட வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளார். மேலும் பரீட்சைக்குத் தோற்றிய 16 மாணவர்களில் சித்திப் புள்ளியான 70 புள்ளிக்கு மேல் 13 மாணவர்கள் சித்தியடைந்து சித்தி வீதம் 81% இனைப் பெற்றுள்ளார்கள்.

குறைந்த வளங்களை கொண்டு இப்பாடசாலை தொடர்ந்தும் பல்வேறு சாதனைகளை முன்னெடுத்து செல்ல பாடசாலை அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருவதாகவும், இவ்வடைவினைப் பெறுவதற்கு காரணமாய் அமைந்த மாணவர்களைப் பாராட்டுவதோடு இப்பெறுபேற்றினைப் பெறுவதற்கு மாணவர்களை சிறந்த முறையில் வழிப்படுத்திய வகுப்பாசிரியை திருமதி எம்.ஏ. பஹ்மியா ஆசிரியை அவர்களுக்கும் ஏனைய பாட ஆசிரியர்கள், பகுதித்தலைவர் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவிப்பதாக பாடசாலை சமூகம் தெரிவித்துள்ளது.

இந்த மாணவியை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் அதிபர் எம்.ஐ.எம். அஸ்மி தலைமையில் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.