;
Athirady Tamil News

பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் தீட்டிய திட்டம் அம்பலம் (காணொளி)

0

இஸ்ரேலில் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை வைத்து ஹமாஸ் அமைப்பு தீட்டிய திட்டத்தை இஸ்ரேலிய இராணுவம் அம்பலமாக்கியுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்றை இஸ்ரேல் படையினர் வெளியிட்டுள்ளனர்.

குறித்த காணொளியில் ஹமாஸ் அமைப்பால் இஸ்ரேலில் இருந்து கடத்தி வரப்பட்ட பிணைக்கைதிகள் அல்-ஷிபா மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

அல்-ஷிபா மருத்துவமனைக்கு பணயக்கைதிகள்
காஸாவில் பல்வேறு மருத்துவமனைகள் உள்ளநிலையில் அல்-ஷிபா மருத்துவமனைக்கு பணயக்கைதிகள் கொண்டு வரக் காரணம் ஹமாஸின் சுரங்க வலைபின்னலின் மையமாக அல்-ஷிபா மருத்துவமனை இருப்பதே என்கிறது அந்தக் காணொளி.

அங்கிருந்து ஹமாஸ் அமைப்பால் எளிதாக பிணைக்கைதிகளை இடமாற்ற இயலும் என்பதற்காகவே அல்-ஷிபா மருத்துவமனையை ஹமாஸ் குழுவினர் பயன்படுத்தினர் என விளக்கமளித்துள்ளது, இஸ்ரேல் பாதுகாப்பு படை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.