;
Athirady Tamil News

வட்டுக்கோட்டை சம்பவம் – சாட்சியங்களை பதியும் மனிதவுரிமை ஆணைக்குழு

0

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளதாக மனிதவுரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.

வட்டுக்கோட்டை பொலிஸாரின் சித்திரவதையில் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறோம். அதன் ஒரு கட்டமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

உயிரிழந்த இளைஞனுடன் கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞனிடம் வாக்குமூலம் பெறவுள்ளோம். அத்தோடு வேறு நபர்களிடமும் தேவைப்படும் பட்சத்தில் அவர்களின் வாக்குமூலங்களையும் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.

உடற்கூற்று பரிசோதனையின் முழுமையான அறிக்கையும் இதுவரை எமக்கு கிடைக்கவில்லை என மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.