;
Athirady Tamil News

யாழில் பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞர் – பக்கசார்பற்ற விசாரணையை கோரும் சுவிட்சர்லாந்து

0

யாழ்ப்பாணத்தில் பொலிஸ் காவலில் வைத்து இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.

இளைஞரின் மரணம் குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாக இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதர் சிரி வால்ட் எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டார்.

காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் இலங்கை அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

“பொலிஸ் காவலில் இருந்த இளைஞர் ஒருவர் இறந்தது குறித்து சுவிட்சர்லாந்து ஆழ்ந்த கவலையில் உள்ளது. காவலில் தவறாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும் எந்தவொரு வழக்கும் ஸ்ரீ லங்கா அதிகாரிகளால் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும், ”என்று தூதுவர் சிறி வால்ட் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.