;
Athirady Tamil News

முல்லைத்தீவில் பரிதாபமாக உயிரிழந்த கொம்பன் யானை

0

மின்சார வேலியில் சிக்குண்டு முல்லைத்தீவு, ஒட்டி சுட்டான் பெரிய சாளம்பன் கிராமத்தில், கொம்பன் யானையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (21) இடம்பெற்ற நிலையில் ,சுமார் 15 வயது மதிக்கத்தக்க யனையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளது.

யானை உயிரிழந்தமை தொடர்பில் மின்சார வேலையினை இணைப்புச் செய்த காணியின் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதேவேளை சாளம்பன் கிராமத்தில் காட்டு யானைகளால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருவதோடு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும், பிரதேச மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.