;
Athirady Tamil News

இலங்கையில் ஏற்பட்ட பாரிய அசம்பாவிதம்: பரிதாபமாக உயிரிழந்த 15 வயது பாடசாலை மாணவன்!

0

அங்குருவதொட்ட, படகொட பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்பாத்த, வத்துகொடை பிரதேசத்தில் வசித்து வந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பாடசாலை மாணவர் மின்னல் தாக்கிய போது அவரது வீட்டின் முற்றத்தில் நின்று கொண்டிருந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மின்னல் தாக்கியதில் மாணவன் அதிர்ச்சியடைந்து நிலைதடுமாறி கீழே விழுந்த நிலையில் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாணவனின் உடலில் வெளிப்புற காயங்கள் எதுவும் காணப்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் அங்குருவத்தோட்ட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.