;
Athirady Tamil News

முல்லைத்தீவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது! (படங்கள்)

0

முல்லைத்தீவு கொக்குளாய் பகுதியில் இடியன் துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது சம்பவம் நேற்று (22.11.2023) மாலை 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை
கொக்குளாய் கிழக்கு பகுதியிலுள்ள வீட்டினை சோதனை செய்த போது பதிவுகள் ஏதுமின்றி சட்டவிரோதமாக துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததன் பேரிலே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குளாய் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன், விசாரணைகளின் பின்னர் இன்றைய தினம் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாக மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.