;
Athirady Tamil News

சந்தேகநபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் மாயம்!

0

ஜா – எல பிரதேசத்தில் சந்தேக நபரை துரத்திச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காணாமல்போயுள்ளதாக ஜா -எல பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல்போனவர் ஜா- எல பொலிஸ் நிலையத்தில் கடைமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தவராவார்.

இவர் ஆற்றில் குதித்து தப்பிச்செல்ல முயன்ற சந்தேக நபர் ஒருவரை துரத்திச் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் ஜா-எல பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.