;
Athirady Tamil News

கிளிநொச்சியில் மாயமான இளம் குடும்பபெண்!

0

கிளிநொச்சி முரசுமோட்டை 2 கட்டை கோரக்கன் கட்டுப்பகுதியில் வசித்துவரும் இளம் குடும்ப பெண் ஒருவர் காணாமல்போயுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொடக்கம் காணவில்லை என உறவினர்களால் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் தற்போதுவரை குறித்த பெண் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

பின்னணி
புதுக்குடியிருப்பு முல்லைத்தீவினை சொந்த இடமாக கொண்ட குறித்த பெண் முரசுமோட்டைப்பகுதியில் வசித்து வந்துள்ளார்.

மேலும் இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஆறு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் குழந்தை ஒன்று உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

இவர் கடந்த நான்கு மாதங்களாக கிளிநொச்சியில் உள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ள நிலையில் கடந்த (15.11.2023) ஆம் திகதி தொழிற்சாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த பெண்ணை அடையாளம் காணும் பட்சத்தில் 0766041635 தொலைபேசி எண்ணுக்கு அழைப்பு ஏற்படுத்தி அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்துமாறு உறவினர்கள் கோரியுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.