;
Athirady Tamil News

டப்ளின் பாடசாலை வெளியே கொடூர சம்பவம்… மூன்று சிறார்கள் உட்பட ரத்தவெள்ளத்தில் மீட்கப்பட்ட ஐவர்

0

டப்ளின் ஆரம்ப பாடசாலை அருகே மர்ம நபர் கத்தியால் தாக்கிய சம்பவத்தில் மூன்று சிறார்கள் உட்பட ஐவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

பார்னெல் சதுக்கத்திற்கு அருகே
இதில் சிறுமி ஒருவரும் பெண் ஒருவரும் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், வழிபோக்கர் ஒருவரால் அந்த தாக்குதல்தாரி சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உள்ளூர் நேரப்படி மதியம் 1.45 மணியளவில் நகரின் உள்-வடக்கில் கிழக்கே பார்னெல் சதுக்கத்திற்கு அருகே அந்த நபர் திடீரென்று தாக்கத் தொடங்கியதாக நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

தகவலையடுத்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர மருத்துவ உதவிக் குழுவினர் மற்றும் பொலிசார் காயமடைந்தவர்களை மீட்டுள்ளதுடன், தாக்குதல்தாரியையும் கைது செய்துள்ளனர்.

ஆபத்தான நிலையில் சிகிச்சை
பொலிஸ் தரப்பில் தெரிவிக்கையில், நடந்த சம்பவம் தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், மேலதிக தகவல் பின்னர் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்துள்ள ஐவரும் டப்ளின் பிராந்தியத்தில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் மூன்று சிறார்களும் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்துள்ளதாக பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

மேலும், பெண் ஒருவரும் சிறுமி ஒருவரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.