;
Athirady Tamil News

இலங்கையில் ரயில் பயணிகளுக்கான ஓர் மகிழ்ச்சி தகவல்!

0

நாட்டில் ரயில் பயணிகளுக்கு ரயில் ஆசனங்களை முன்பதிவு செய்வதில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக புதிய டிஜிட்டல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தன்னார்வ தொண்டு நிறுவனம் வடிவமைத்துள்ள செயலி மூலம் இது செய்யப்பட உள்ளது.

மேலும் இந்த அம்சம் ‘RDMNS.LK Live Train Alerts Mobile’ செயலி மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் எளிதில் அணுகக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும், RDMNS LK மொபைல் போன் செயலியானது ரயில் இருப்பிடம், ரயில் தாமதம் மற்றும் அதற்கேற்ப வரவிருக்கும் நிலையங்களுக்கான எதிர்பார்க்கப்படும் நேரங்கள், உள்ளிட்ட பல ரயில் தொடர்பான சேவைகளைப் பெறும் திறனைக் கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.