;
Athirady Tamil News

மருமகனால் தாக்கப்பட்டு மாமியார் உயிரிழப்பு; இலங்கையில் பகீர் சம்பவம்

0

மீரிகம பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பொல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மீரிகம , மாகுர பிரதேசத்தைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணாவார். இவர் தனது மகளின் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட து.

தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் மகளின் கணவனால் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

இதனையடுத்து சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்று தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.