;
Athirady Tamil News

போதைப்பொருளுக்காக பிள்ளைகளை விற்ற பெற்றோர்; அதிர்ச்சியில் பொலிஸார்

0

இந்தியாவின் மும்பை நகரத்தில் பெற்றோர் போதைப்பொருளுக்காக தங்களது மூத்த ஆண் பிள்ளை மற்றும் ஒரு மாத குழந்தையை பணத்திற்கு விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பொலிஸாரால் பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் குழந்தையை தேடும் பொலிஸார்
கைது செய்யப்பட்ட பெற்றோர் தங்களது ஆண் பிள்ளையை 60 ஆயிரம் ரூபாவிற்கும் ஒரு மாத பெண் குழந்தையை 14 ஆயிரம் ரூபாவிற்கும் விற்பனை செய்துள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.

விற்பனை செய்யப்பட்ட ஆண் பிள்ளை மீட்கப்பட்டுள்ள நிலையில் பெண் குழந்தையை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருகின்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.