;
Athirady Tamil News

இலங்கையில் சீனாவிற்கு வழங்கப்படவுள்ள மற்றுமொரு அனுமதி

0

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சீன அரசாங்கத்திற்கு சொந்தமான சினோபெக் நிறுவனம் கொண்டு வந்த பிரேரணைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை (27) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கவுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

அதற்கான முதலீடு 4.5 பில்லியன் டொலர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான
சீனாவின் சினோபெக் மற்றும் விட்டோல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நிர்மாணிப்பதற்கான திட்டங்களை கடந்த ஓகஸ்ட் மாதம் முன்மொழியப்பட்டபோது சமர்ப்பித்திருந்தன.

ஆனால் பின்னர் விட்டோல் செயல்முறையிலிருந்து விலகியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.