;
Athirady Tamil News

விலை குறைப்பிற்கு அனுமதி: அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

0

பண்டி உரம் எனப்படும் MOP உரத்தின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியவில் இன்று காலை பயிர்சேத நட்டஈடு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

விலை குறைப்பிற்கு அனுமதி
அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை பெரும் போகத்திற்காக பண்டி உரம் எனப்படும் MOP உரத்தின் விலையை குறைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி பண்டி உர மூட்டை ஒன்றின் விலை 9,000 ரூபாவாக குறைக்கப்படும். அரசாங்கத்திற்கு சொந்தமான இரண்டு உர நிறுவனங்களும் அந்த விலையில் பண்டி உரத்தை விற்பனை செய்யும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.