;
Athirady Tamil News

மதுரங்குளி காளி கோவிலில் திருட்டு

0

மதுரங்குளி ஜோசப் வத்தை பகுதியில் அமைந்துள்ள காளி கோவிலில் அனைத்து சிலைகளும் உடைக்கப்பட்டு பித்தளை சிலைகள் மற்றும் திரிசூலம் கொண்ட பெட்டி திருடப்பட்டுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசாரணை

அப்பகுதி மக்களால் வழிபட்டு வந்த காளி கோவிலில் இருந்த சுமார் இரண்டு அடி உயரமுள்ள இரண்டு சிலைகள் தரையில் வீசப்பட்டு உடைக்கப்பட்டள்ளதாக மேலும் சுட்டிகாட்டியுள்ளனர்.

அதேநேரம், காளி சிலைகளுக்கு அருகில் இருந்த பித்தளையால் செய்யப்பட்ட திரிசூலம், பெட்டியில் இருந்த காளி சிலைகள் உள்ளிட்ட பொருட்களும் திருடப்பட்டுள்ளன.

குறித்த காளி கோவில் மதுரங்குளி நகரத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.