;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்களின் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

காய்ச்சல், இருமல் மற்றும் சளி இருந்தால் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளி, முன்பள்ளி அல்லது பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை இலங்கை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

எச்சரிக்கை
தற்போது நாட்டின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் சளி மற்றும் காய்ச்சலுடன் கூடிய சுவாச நோய் தொடர்பிலேயே குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அது கோவிட்-19 மற்றும் இன்புளுவன்சா உள்ளிட்ட பல வைரஸ்களின் கலவையாக இருக்கலாம் என ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் அலர்ஜி நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.