;
Athirady Tamil News

கொழும்பு அரசியலில் ஏற்படவுள்ள மாற்றம் – சந்திரிக்கா தலைமையில் மீண்டும் உருவாகும் கூட்டணி

0

எதிர்வரும் பொதுத் தேர்தலை இலக்காகக் கொண்டு புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கும் பணியில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முன்னிலை வகித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவும் இணைந்து சில காலங்களுக்கு முன்னர் ஸ்தாபித்த கதிரை சின்னத்துடனான பொது முன்னணியை புத்துயிர் பெற நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவராக சந்திரிகா பண்டாரநாயக்காவை நியமித்து, கட்சியின் தலைமைப் பொறுப்பை மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், கூட்டணியின் தலைமைத்துவத்தை சந்திரிகாவிடம் வழங்குவதற்கு ஸ்ரீலங்கா கட்சியின் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த வெளியீடு சற்று தாமதமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் அரசியலில் திரைக்குப் பின்னால் இருந்த ஒரு நபராகக் காணப்பட்ட முன்னாள் ஜனாதிபதி, பலம் வாய்ந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை தோற்கடித்து நல்லாட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு பெரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டவராக காணப்படுகின்றார்.

அதற்கு இந்திய அரசின் ஆதரவைப் பெற்றதாக அப்போது ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கிடையில், மேலும் பல கட்சிகள் மேலும் மூன்று அரசியல் கூட்டணிகளை உருவாக்க முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது

மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச தலைமையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையில் புதிய அரசியல் கூட்டணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு முக்கியமான ஒரு விடயமாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.