;
Athirady Tamil News

மாவீரர்களை நினைவு கூர்ந்து மன்னார் புனித வெற்றி நாயகி ஆலயத்தில் விசேட திருப்பலி!

0

தமிழர் பகுதியில் யுத்தத்தில் உயிரிழந்த மாவீரர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் இன்றைய தினம் (27-11-2023) காலை விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

குறித்த இரங்கல் திருப்பலி அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இதன்போது யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.