;
Athirady Tamil News

கல்வி அமைச்சின் முறையற்ற செயற்பாடு அம்பலம்

0

கல்வி அமைச்சு முறையற்ற வகையில் கடந்த மூன்று வருடங்களாக பிரபல பாடசாலைகளில் 2,367 மாணவர்களை உள்வாங்கியுள்ளது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.

கொழும்பு குருமதுரையில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஜோசப் ஸ்டாலின் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால்
2020 ஜனவரி 1 முதல் 2022 மே 31 வரையிலான காலப்பகுதியில் கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசேட தணிக்கை அறிக்கையானது முறையற்ற வகையில் மாணவர்களை பாடசாலைக்கு அனுமதிப்பதற்காக 3,308 கடிதங்களை கல்விச் செயலாளர் வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது என்றார்.

அதில் 72 சதவீத கடிதங்கள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிபர் செயலகம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமையவே வழங்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பெறுவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளாதகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பின் பிரபல பாடசாலைகளுக்கு
கடந்த வருடம் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் வகுப்புக்கு கொழும்பு விசாகா கல்லூரிக்கு 41 கடிதங்களும், கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கு 48 கடிதங்களும், கொழும்பு நாலந்தா கல்லூரிக்கு 38 கடிதங்களும், கொழும்பு சிறிமாவோ மகளிர் கல்லூரிக்கு 33 கடிதங்களும், குருநாகல் மலியதேவ. சிறுவர்கள், கல்லூரி 31 கடிதங்கள், குருநாகல் மலியதேவ பெண்கள் கல்லூரிக்கு 48 கடிதங்கள், கண்டி தர்மராஜா கல்லூரிக்கு 29 கடிதங்கள், கண்டி மகாமாயா பெண்கள் கல்லூரிக்கு 30 கடிதங்கள், கண்டி கிங்ஸ்வுட் கல்லூரிக்கு 15 கடிதங்கள் மற்றும் கண்டி உயர் பெண்கள் கல்லூரிக்கு 31 கடிதங்கள் என சிபார்சு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இதனால் கல்வி உதவித்தொகையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் 6ம் வகுப்பு வாய்ப்பை இழந்துள்ளனர் என்றார்.

கடிதங்கள் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இடைநிலை வகுப்புகளுக்கு அனுமதிக்கப்பட்டு அதில் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைகள் சிறப்பிடம் பெற்றுள்ளதாக தெரிவித்த ஸ்டாலின், இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அநீதி இழைக்கப்பட்ட பெற்றோர்களை கோருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.