;
Athirady Tamil News

நாவலர் பெருமான் நினைவு வைபவம்

0

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நல்லைநகர் நாவலர் பெருமானின் நினைவு வைபவம் அவரது குருபூசை நன்னாளான இன்று திங்கட்கிழமை (04.12.2023) காலை நல்லூரில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் இடம்பெற்றது.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி.ஆறு.திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் துர்க்காபுரம் மகளிர் இல்ல மாணவிகளின் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வு மற்றும் பேச்சு இடம்பெற்றது.

அத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர். சி.சிவலிங்கராஜா “நாவலர் பெருமானால் காக்கப்பட்ட சுதேசிய சைவத்தமிழ்ப் பண்பாடு” எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். அதனைத் தொடர்ந்து மகேஸ்வர பூசை (அன்னதானம்) இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.