;
Athirady Tamil News

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் தீப்பரவல்

0

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற கட்டடத்தொகுதி வளாகத்தில் இன்று அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது.

கொழும்பு தீயணைப்பு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

இதன்போது தீயை கட்டுப்படுத்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

தீப்பரவலுக்கான காரணம்
இந்த தீப்பரவலுக்கான காரணம் கண்டறியப்படவில்லை என்பதுடன், தீயினால் பாதிப்பும் எவையும் ஏற்படவில்லை எனவும் அறியமுடிகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.