;
Athirady Tamil News

ஹட்டன் பள்ளிவாசல் காவலாளியை கொன்றுவிட்டு : உண்டியல் திருட்டு

0

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் காவலாளியின் தலையில் அடித்துக் கொன்று விட்டு, பள்ளிவாசலில் இருந்து உண்டியலில் இருந்த பணம் எடுக்கப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலில் சுமார் இரண்டு வருடங்களாக காவலாளியாக கடமையாற்றிய ஹட்டன் ஹிஜிரபுர பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான எம்.இப்றாஹிம் (வயது 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

ஒருவர் ஜும்மா பள்ளிவாசலின் சுவரில் இருந்து குதித்து காவலாளி தங்கியிருக்கும் அறைக்கு சென்று விட்டு வெளியே வந்து பள்ளிவாசலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளதாக ஹட்டன் ஜும்மா பள்ளிவாசல் போதகர் ஏ.ஜே.எம்.ஃபாமிஸ் குறிப்பிட்டுள்ளனர்.

ஹட்டன் ஜும்மா பள்ளிவாசலின் உண்டியல் பல தடவைகள் உடைக்கப்பட்டு, பணம் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர் பள்ளிவாசல் பாதுகாப்பிற்காக காவலாளி நியமிக்கப்பட்டதாக பள்ளிவாசல் பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.