;
Athirady Tamil News

நாட்டுக்கு சுற்றுலா வந்த பெண்னிடம் கொள்ளை!

0

நாட்டுக்கு சுற்றுலா வந்த பங்களாதேஷ் பெண் ஒருவரிடம் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்னர்.

பங்களாதேஷ் பெண் நடந்து சென்றுகொண்டு இருக்கையில் சந்தேக நபர்களான இருவரும் தங்க நகைகளை கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

நகை விற்பனை
அதோடு கொழும்பு செட்டித்தெருவிலுள்ள நகை கடை ஒன்றில் குறித்த நகையை விற்பனை செய்து 2 இலட்சத்து 25 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வழங்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதானவர்கள் அதிக போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.