;
Athirady Tamil News

பாடசாலை மதில் இடிந்து வீழ்ந்ததில் இரு மாணவர்கள் காயம்

0

சிலாபம் – அம்பகதவில பாடசாலையின் மதில் இடிந்து வீழ்ந்ததில் இரண்டு மாணவர்கள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

இன்று (12) காலை மாணவர்கள் இருவரும் தற்காலிகமாக கட்டப்பட்டிருந்த சுவருடன் பொருத்தப்பட்டிருந்த வாயிலை மூட முற்பட்டபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு காயமடைந்துள்ளனர்.

மாணவர்கள் விளையாடியபோது நுழைவாயிலோடு இணைந்த மதில் இதன்போது இடிந்து வீழ்ந்துள்ளது. காயமடைந்த மாணவர் ஒருவர் சிகிச்சைகளின் பின்னர் வீடு திரும்பியுள்ளதாக கூறப்படுகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.