;
Athirady Tamil News

மாணவர்களுக்கு மகிழ்ச்சித் தகவல் : புலமைப்பரிசில் பரீட்சையை இலகுவாக்கத் திட்டம்

0

இலங்கையில் எதிர்வரும் ஆண்டு முதல் தற்போதுள்ள கல்வி முறையில் பல முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் மற்றும் 2022இல் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மதிப்பீடு செய்யும் நிகழ்வில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர்

எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை தற்போதைய நிலைமையை விட இலகுவாக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மாணவர்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணியல் திறன்களை அளவிடுவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பரீட்சையில் 100 வீத சித்திகளைப் பெற்று மாணவர்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டார்கள் என்று குறிப்பிட்டார்.

தொடர்ச்சியான வருகை அவசியம்
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் 30 வீத புள்ளிகளைப் பெறுவதோடு 4ஆம் மற்றும் 5ஆம் தரங்களில் வகுப்பறையில் நடத்தப்பட்ட மதிப்பீட்டில் பெறப்பட்ட மதிப்பெண்களில் 30 வீதமான மதிப்பெண்களை மாணவர்கள் பெற வேண்டும் என தெவித்தார்.

இதற்காக மாணவர்கள் தொடர்ச்சியான வருகைப் பதிவைப் பெறவேண்டும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.