;
Athirady Tamil News

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழில் கலந்துரையாடல்

0

2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக,
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணப் பிராந்திய காரியாலயமானது “Dignity,
Freedom, and Justice for All” எனும் தொனிப்பொருளில் நிகழ்வு ஒன்றினை நடாத்தியது.

குறித்த நிகழ்வானது இன்று புதன்கிழமை(13) காலை யாழ்ப்பாணம் டேவிட் வீதியில் உள்ள கலைத்தூது அழகியல் கல்லூரியில் நடாத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மனித
உரிமை பாதுகாவலர்களுக்கான வழிகாட்டல்கள் தொடர்பில் (Guideline of Human Rights Defenders) கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

இதன்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உத்தியோகத்தர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள், சிவில் சமூகத்தினர், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.