;
Athirady Tamil News

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தின் பதுங்கு குழியில் ஏற்பட்ட விபத்து: 3 பேர் உயிரிழப்பு

0

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

நிலக்கரி சுரங்க விபத்து
சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷாங்க்கிசி மாகாணத்தில் உள்ள ஹுவாஜின் கோக்கிங் நிலக்கரி சுரங்கத்தில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நிலக்கரியை சேமித்து வைக்க பயன்படுத்தும் பதுங்கு குழிகளில் இறங்கி 4 தொழிலாளர்கள் சுத்தம் செய்யும் வேலை செய்து கொண்டு இருந்த போது இந்த திடீர் விபத்து ஏற்பட்டுள்ளது.

பதுங்கு குழியில் இருந்து ஒருவரை மீட்பு குழுவினர் மீட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸாரும் மீட்பு படையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஷாங்க்சி நிலக்கரி சுரங்க வெடிப்பு விபத்தின் போது 11 பேர் உயிரிழந்தனர்.

அதைப்போல சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள குய்சோ மாகாணத்தின் நிலக்கரி சுரங்கத்தில் 16 வரை உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.