;
Athirady Tamil News

தந்தையின் அழுகிய உடலுடன் 3 நாட்களாக இருந்த மகன்: துர்நாற்றம் வீசியதால் சந்தேகம்

0

தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது அழுகிய உடலுடன் 3 நாட்களாக தனியாக மகன் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மனநலம் பாதித்த மகன்
தமிழக மாவட்டமான மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீசன் (74). இவருக்கு கார்த்திக் சீனிவாசன் (40) என்ற மகனும், ஷர்மிளா (44) என்ற மகளும் உள்ளனர். இதில் மகள் ஷர்மிளா திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். மகன் கார்த்திக் சீனிவாசனுக்கு மனநலம் பாதித்ததாக கூறப்படுகிறது.

வீட்டின் கீழ் பகுதியில் ஜெகதீசன் 2 கடைகளை வாடகைக்கு விட்டு அதன் மூலம் வாழ்ந்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட மகனை அவர் தான் பராமரித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜெகதீசனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால், தந்தை மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட தனது சகோதரருக்கும் ஷர்மிளா தான் வீட்டிற்கு வந்து உணவு கொடுத்துவிட்டு செல்வார்.

அதன்படி, கடந்த 10 -ம் திகதி இருவருக்கும் உணவு கொடுத்துவிட்டு திரும்ப தந்தை வீட்டிற்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

இறந்த தந்தையுடன் மகன்
இந்நிலையில், கடந்த 3 நாட்களாக ஜெகதீசன் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால், சந்தேகம் அடைந்த கடைக்காரர்கள் மேலே சென்று பார்த்துள்ளனர்.

அப்போது தான் தந்தை இறந்தது கூட தெரியாமல் அவரது அழுகிய சடலத்துடன் மனநலம் பாதிக்கப்பட்ட மகன் இருந்தது தெரியவந்தது. உடனே இதுகுறித்து பொலிஸாருக்கும் அவரது மகன் ஷர்மிளாவுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார், ஜெகதீசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.