;
Athirady Tamil News

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் சொகுசு கார் விபத்து

0

நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் பயணித்த சொகுசு கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தானது இன்று (16.12.2023) காலை இடம்பெற்றுள்ளது.

நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி நானுஓயா ரதல்ல வீதியில் சென்ற சொகுசு காரே சீரற்ற காலநிலை காரணமாக சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் இடது பக்கமாக இழுத்துச் செல்லப்பட்டு பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துள்குள்ளதாக கூறப்படுகிறது.

மேலதிக விசாரணை
இந்நிலையில், சொகுசு காரில் பயணித்த கணவன், மனைவி இருவரும் எந்தவித காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவ இடத்திற்கு விரைந்த நானுஓயா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.