;
Athirady Tamil News

உக்ரைனுக்கான நிதியுதவியை இறுதிநேரத்தில் முடக்கிய நாடு

0

உக்ரைனுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அளிப்பதாக இருந்த பல பில்லியன் யூரோ நிதியுதவியை ஹங்கேரி தடுத்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் உக்ரைனுடன் உறுப்பினர் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க முடிவு செய்த சிறிது நேரத்திலேயே ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் அந்த நாட்டுக்கான நிதியுதவி தொடர்பான தடையை அறிவித்தார்.

ஆரம்பம் முதலே ஹங்கேரி எதிர்ப்பு
மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்வதில் ஆரம்பம் முதலே ஹங்கேரி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.ஆனால் இதுவரை உக்ரைன் முன்னெடுக்கும் முயற்சிகளை தடுக்கவில்லை என்றே கூறப்படுகிறது.

உக்ரைனுக்கு வழங்குவதாக உறுதி அளித்திருந்த 50 பில்லியன் யூரோ தொகை தொடர்பில் 26 நாடுகள் ஒப்புக்கொண்ட பின்னர் ஹங்கேரி பிரதமரால் அதை முறியடிக்க முடியாது என்றே நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த உதவிப் பேச்சுவார்த்தை அடுத்த ஆண்டு ஆரம்பிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

கருத்து வேறுபாடால் தாமதமான உதவி
முன்னதாக 61 பில்லியன் டொலர் மதிப்பிலான அமெரிக்க இராணுவ தளபாட உதவி தொடர்பில் உக்ரைன் அதிபர் ஒப்புதல் கோரியிருந்தார். ஆனால் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட பெரும் கருத்து வேறுபாடுகள் காரணமாக அந்த முடிவும் தாமதமாகி வருகிறது.

ரஷ்யப் படைகளுக்கு எதிராக 660 நாட்களாக தொடர்ந்து போரிட்டு வருவதால், உக்ரைன் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் நிதியுதவியை முழுமையாக சார்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.