;
Athirady Tamil News

யாழ்ப்பாண நபரை கடத்திச் சென்று தாக்கிய இரு இளைஞர்கள்!

0

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவரை வெளிநாடு அனுப்புவதாக கூறி மோசடி செய்த நபரை கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரு இளைஞர்ளையும் 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

கோப்பாய் பிரதேசத்தில் 53 வயதான நபர் ஒருவர் கடத்தப்பட்டதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி மோசடி
அது தொடர்பில் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இரு இளைஞர்களை கைது செய்ததுடன் , கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நபரையும் மீட்டு இருந்தனர்.

சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின்போது, வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி தம்மிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி வந்தமையால், அவரிடம் இருந்து பணத்தினை பெற்றுக்கொள்ளவே தாம் அவ்வாறு நடந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்களை , யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, இரு இளைஞர்களையும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.