;
Athirady Tamil News

படியில் வழுக்கி விழுந்ததில் இளம் இளைஞன் பலி

0

நாவலப்பிட்டி பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் படியில் வழுக்கி விழுந்ததில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்க சென்றபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

உயிரிழந்தவர் நாவலபிட்டி பிரதேசத்தை சேர்ந்த 20 வயதுடையவராவார் என தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸார் விசாரணை
வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணெய்யை வாங்குவதற்காக கடைக்கு செல்லும் போது வீட்டிற்கு அருகிலுள்ள படியில் வழுக்கி வீழ்ந்து கையில் இருந்த கண்ணாடி போத்தல் உடைந்து கழுத்தில் குத்தப்பட்டு காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் நாவலப்பிட்டி பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.