;
Athirady Tamil News

போர் நிறுத்தத்திற்கு தயாராகும் புடின்: பின்னிணியில் இருக்கும் சூழ்ச்சி

0

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனுக்கு எதிரான சண்டையை நிறுத்துவதற்கான தனது தயார் நிலையை தெரிவிக்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்ய உக்ரைன் போர் ஆரம்பித்து 2 வருடங்களாகுவதற்கு நெருங்கியுள்ள நிலையில் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போர்நிறுத்தம்
ஆனால், விளாடிமிர் புடின் ஆட்சியில் இருக்கும் வரை ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போவதில்லை என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உறுதியாக குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீதான தனது ஏறக்குறைய இரண்டு வருட யுத்தத்தில் தற்போது போர்நிறுத்தம் பற்றி விவாதிக்க தயாராக இருப்பதாக வெளிநாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புடினின் சூழ்ச்சி
அத்தோடு, அவர் குறைந்தபட்சம் செப்டம்பரில் இருந்து தற்போதைய நிலையில் சண்டையை உறைய வைக்கும் போர்நிறுத்தத்திற்கு தான் தயாராக இருப்பதாக சமிக்ஞை செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.