;
Athirady Tamil News

தெற்கு லண்டன் வீதியில் வைக்கப்பட்ட 50,000 பவுண்ட் மதிப்புள்ள STOP கலைப்படைப்பு! பட்டப்பகலில் திருடிய நபர் கைது

0

இங்கிலாந்தின் தெற்கு லண்டன் வீதியில் வைக்கப்பட்ட கலைப்படைப்பை திருடியதாக சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கலைப்படைப்பு
மூன்று இராணுவ டிரோன்களை வைத்து STOP எனும் சாலை அடையாளத்துடன் சேர்த்து கலைப்படைப்பு உருவாக்கப்பட்டது.

Banksy-யின் இந்த சமீபத்திய படைப்புக்கு கேலரி உரிமையாளரால் 50,000 பவுண்டுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இது தெற்கு லண்டனின் Peckham-யில் உள்ள சாலையில் மின் விளக்கு கம்பத்தில் பொருத்தப்பட்டது. இதுதொடர்பான புகைப்படத்தை Banksy தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்தது.

பகலில் திருட்டு
ஆனால் அடுத்த ஒருமணிநேரத்தில் இரு நபர்கள் Bolt Cutters-ஐ எடுத்துக் கொண்டு சென்று STOP கலைப்படைப்பை திருடிச் சென்றனர்.

பட்டப்பகலில் நடந்த இந்த திருட்டு தொடர்பான வீடியோ வெளியான நிலையில், பொலிஸார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளனர்.

இந்த திருட்டு சம்பவம் பட்டப்பகலிலேயே நடந்துள்ளதுடன், சிலர் அதனை நேரில் பார்த்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.