;
Athirady Tamil News

கதிரை மீதேறி தூசு தட்டிய முதியவர் தவறி கீழே விழுந்து பரிதாபமாக உயரிழந்தார்!

0

அராலியிலுள்ள வீட்டில் தூசு தட்டுவதற்காக கதிரையின் மேல் ஏறிய முதியவர் ஒருவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (22) அராலி வடக்கு பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபர் வீட்டில் தூசு தட்டுவதற்காக கதிரையின் மேல் ஏறிய தவறி கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்

இந்நிலையில் உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதோடு, உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.