;
Athirady Tamil News

பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து! 19 பேர் பலியான சோகம்..உயிரிழப்பு உயரும் அச்சம்

0

நிகரகுவா நாட்டில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 19 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கட்டுப்பாட்டை இழந்த பேருந்து
மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவின் Matagalpa பகுதியில் 70கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.

குழந்தைகள், பெண்களும் இதில் அடங்குவர். அப்போது திடீரென பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

இதனால் ராஞ்சோ கிரான்டேவில் உள்ள மன்செரா ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதியது. அதனைத் தொடர்ந்து அங்கிருந்து பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்தது.

19 பேர் பலி
இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணித்தவர்களில் 19 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 10 பேர் குழந்தைகள் என்றும், 26 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதன் காரணமாக பலி எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.