;
Athirady Tamil News

பள்ளத்தில் விழுந்து முச்சக்கரவண்டி விபத்து: நால்வர் படுகாயம்

0

பலாங்கொட – வலேபொட பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்த முச்சக்கரவண்டி வலேபொட, மனதுங்கந்த பகுதியில் வைத்து நேற்று (01.01.2024) விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கரவண்டி சுமார் ஐம்பது அடி செங்குத்தான சரிவில் கவிழ்ந்து தேயிலை செடிக்குள் சிக்குண்டுள்ளதாக கூறப்படுகிறது.

விபத்துக்கான காரணம்
காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக பலாங்கொடை ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் இரண்டு குழந்தைகளும் அடங்குதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கரவண்டியை சாரதிக்கு கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய விபத்து தொடர்பில் பலாங்கொடை பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.