;
Athirady Tamil News

வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கம்! மக்களுக்கு அரசு விடுத்த பகிரங்க எச்சரிக்கை

0

இலங்கையில் இந்த மாதம் முதல் வரி செலுத்துவோருக்கான பதிவு இலக்கத்தை பெறாத நபர்களுக்கு 50,000 வரை அபராதம் விதிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும் என பொதுமக்களுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வரிக் கோப்பு
அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும்.

வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு ஒருவர் வருமானமாக 12 இலட்சத்திற்கு மேல் இருந்தால் அவர்களும் வருமான வரியில் பதிவு செய்ய வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.