;
Athirady Tamil News

விசேட தேவையுடைய பிள்ளைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் அறிவிப்பு

0

இலங்கையில் விசேட தேவையுடைய பிள்ளைகளை வலயக் கல்வி அலுவலகங்களில் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு முறையான கல்வியை வழங்கும் விதமாகவே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த பிள்ளைகளை உரிய வயதில் பாடசாலைகளுக்கு முதலாம் தரத்திற்கு அனுப்புவது தொடர்பான பாடத்திட்டத்தையும் அமைச்சு தயாரித்து மதிப்பீட்டுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் கற்பிக்கும் திட்டம்

குழந்தையின் விசேட தேவைகளைப் பொறுத்து, அவர்கள் வீட்டில் கற்பிக்கப்படுகிறார்கள் அல்லது பாடசாலைகளுக்கு அனுப்பப்படுகிறார்கள்.

கடுமையாக பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வீட்டில் கற்பிக்கும் திட்டம் செயற்படுத்தப்படும் எனவும் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அத்தகைய மூன்று குழந்தைகளுக்கு ஒரு ஆசிரியர் பணியமர்த்தப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

7000 விசேட தேவையுடைய குழந்தைகள்
இன்று முதல் பதிவு செய்யப்படும் பிள்ளைகள் பாடத்திட்டத்தின்படி கற்பிக்கப்படுவார்கள் என்றும் அங்கு காட்டப்படும் போக்குகளின் அடிப்படையில் முதலாம் தரத்திற்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கையில் ஒவ்வொரு வருடமும் சுமார் 7000 விசேட தேவையுடைய குழந்தைகள் பதிவு செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.