;
Athirady Tamil News

விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்தவர் கைது

0

வவுனியா விமானப்படை தளத்தை புகைப்படம் எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (2024.01.05) வவுனியா விமானப்படை தளத்தில் ஜனாதிபதி விசேட விமானத்தில் வருகை தந்து வன்னி அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ள நிலையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு வாகனத்தொடரணி சென்றுக் கண்டிருந்த நிலையில் அதனை இளைஞரொருவர் புகைப்படம் எடுத்தமையை அவதானித்த பாதுகாப்பு உத்தியோகத்தரொருவர் குறித்த இளைஞனை கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

குறித்த இளைஞன் பூனாவ பகுதியை சேர்ந்த பைருஸ் பவாஹிர் என்பவராவார். இவரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.