;
Athirady Tamil News

ஜெர்மனி: மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 நோயாளிகள் பலி

0

ஜெர்மனியில் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 நோயாளிகள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு ஜெர்மனியில் உள்ள மருத்துவமனை ஒன்றின் 4வது தளத்தில் நேற்றுமுன் தினம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் தீ மளமளவென பல்வேறு அறைகளுக்கு பரவியது.

இச்சம்பவத்தைக் கண்ட அவசரகால பணியாளர்கள் மருத்துவமனையில் இருந்து அனைவரையும் பத்திரமாக வெளியேற்றினர்.

அதைத்தொடர்ந்து தீயை ஒருவழியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் 3 நோயாளிகள் சம்பவ இடத்தில் பலியாகினர். ஒருவர் மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் எதுவும் உடனடியாக வெளியிடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.