;
Athirady Tamil News

பொலிஸ் அதிகாரின் கையை கடித்துவிட்டு தப்பியோடிய நபரால் பரபரப்பு!

0

சிலாபம் – புத்தளம் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவர் பொலிஸ் உத்தியோகத்தரின் கையை கடித்து தப்பியோடிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவம் நேற்றிரவு (06-01-2024) 10.45 மணியளவில் ஆராச்சிக்கட்டுவ – ஹலம்பவடவன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த மோட்டார் சைக்கிளை துரத்திச் சென்ற போது, ​​குறித்த் நபர் பொலிஸ் அதிகாரின் கையை கடித்து விட்டு தப்பியொடியதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர் ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆவார்.

பின்னர், அவர் சிலாபம் பொது வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளார்.

சந்தேக நபரை தேடி ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.