;
Athirady Tamil News

பிலிப்பைன்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0

பிலிப்பைன்சில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள மாகாணமான சாரங்கனிக்கு தென்கிழக்கே சுமார் 100 கிமீ (62.1 மைல்) தொலைவில் தாக்கியது. 70.3 கிலோமீட்டர் (43.6 மைல்) ஆழத்தில் நில அதிர்வு நிகழ்வு நிகழ்ந்தது.

நிலநடுக்கத்தால் பரபரப்பு
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

கடந்த மாதமும் நிலநடுக்கம்
கடந்த மாதம் 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் மிண்டனாவோவைத் தாக்கியதுடன் சுனாமி எச்சரிக்கையைத் தூண்டியது. குறைந்தது மூன்று பேர் இதில் உயிரிழந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.