;
Athirady Tamil News

இளவரசியின் யாழ். வருகையால் பொது நூலகத்திற்கு பூட்டு

0

பிரித்தானிய ஆன் இளவரசி மற்றும் அவரது கணவர் வைஸ் அட்மிரல் சேர் திமோதி லோரன்ஸ் ஆகியோரின் யாழ்.வருகையால் இன்றைய தினம் வியாக்கிழமை யாழ்.பொது நூலகம் சுமார் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டிருந்தது.

யாழ்.பொது நூலக பிரதான வாயிலில் ” விசேட காரணத்தினால் காலை 10. 30 மணிக்கு பூட்டப்பட்டு , பிற்பகல் 2 மணிக்கு மீள திறக்கப்படும்” என அறிவித்தல் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது.

இளவரசி உள்ளிட்ட குழுவினர் யாழ்.பொது நூலகத்திற்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டமையால் பாதுகாப்பு ஏற்பாட்டிற்காக நூலகம் மூன்றரை மணி நேரம் பூட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்ட போதிலும் , அறிவித்தலில் ” விசேட காரணம்” என குறிப்பிட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.