;
Athirady Tamil News

மருதங்கேணியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

0

யாழ்ப்பாணம் , வடமராட்சி கிழக்கு பகுதியில், நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் , வெற்றிலைக்கேணி, முள்ளியானை சேர்ந்த அன்ரன் பிலிப்பின் தாஸ் (வயது 31) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் , விபத்து தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.