;
Athirady Tamil News

தைத்திருநாளில் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷி சுனக்

0

தைத்திருநாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் பிரித்தானியத் தமிழர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இதனை அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியிலேயே குறிப்பிட்டுள்ளார்.

“அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, கல்வி, அறிவியல், வணிகம், பொதுச் சேவை ஆகியவற்றில் ஆற்றிவரும் அற்புதமான பங்களிப்பிற்காக பிரித்தானியத் தமிழர்களுக்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் கடின உழைப்பு மற்றும் உங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் நலனுக்காக நீங்கள் செய்யும் தியாகங்களுக்காகவும், குறிப்பாக எங்கள் NHS இல் சேவையின் உண்மையான அர்த்தத்தை வெளிப்படுத்தியதற்காகவும் நான் மகத்தான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பொங்கல் திருநாளில் இங்கும், உலகெங்கிலும் உள்ள அனைவருக்கும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும் மற்றும் செழிப்பும் பெருகட்டும்.” என்றார்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.