;
Athirady Tamil News

போதைப்பொருள் பாவித்த கிராம உத்தியோகத்தர் கைது

0

புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள கிராம உத்தியோகத்தர் ஒருவர் கடமையின்போது ஹெரோயின் பயன்படுத்திய குற்றச்சாட்டில் இன்று புதன்கிழமை (17) கைது செய்யப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப் பொருட்களை விற்பனை செய்வதாகவும் இவற்றை அருந்தி விட்டு போதையில் கடமையாற்றுவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிகள் கிராம உத்தியோகத்தரை கைது செய்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.