;
Athirady Tamil News

தாய்லாந்து பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 22 பேர் உயிரிழப்பு

0

தாய்லாந்து நாட்டின் முவாங் மாவட்டத்தில் பட்டாசு ஆலை ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியிலிருந்த நிலையில், நேற்று மாலை திடீரென ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இச்சம்பவத்தில் 12 பெண்கள் மற்றும் 8 ஆண்கள் பலியாகியுள்ளதோடு 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வெடிவிபத்தின் காரணமாக, 100 மீட்டர் தொலைவுக்கு பொருட்கள் வீசியடிக்கப்பட்டுள்ளன என்றும் ஊடக செய்தியில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.